
லண்டன்: நடப்பு விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார் ஜோகோவிச். இது அவர் வெல்லும் 21-வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். அதோடு ஏழாவது முறையாக ஒற்றையர் பிரிவில் விம்பிள்டன் பட்டத்தை வென்றுள்ளார் அவர்.
கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் சாம்பியன்ஷிப்புக்கான நடப்பு தொடர் இங்கிலாந்தில் கடந்த ஜூன் 27-ம் தேதி தொடங்கியது. இதில் டென்னிஸ் விளையாட்டு உலகில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்று விளையாடினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments