
ராஞ்சி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி முழங்கால் மூட்டு வலிக்கு ஆயுர்வேத சிகிச்சை முறை வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வைத்தியர் மரத்தடியில் அமர்ந்து சிகிச்சை கொடுப்பது வழக்கமாம்.
முன்னதாக தோனியின் பெற்றோர்கள் அந்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுள்ளனர். அவர்களுக்கு அந்த சிகிச்சையில் பலன் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து அந்த வைத்தியரை தோனி சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது தந்து இரண்டு மூட்டுகளிலும் வலி இருப்பதாக சொல்லி 40 ரூபாய் கொடுத்து ஒரு டோஸ் மருந்து வாங்கி உள்ளதாகவும் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments