
மதுரை: காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பதைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக, மாணவர் அமைப்புக்களைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டோர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடந்தது. வழக்கமான நடைமுறையை தவிர்த்து, புதிதாக கவுரவ சிறப்பு விருந்தினர் என்ற பெயரில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விழாவில் கலந்து கொண்டார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது அலுவலகமே இதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இவ்விழாவை தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, உயர் கல்விச் செயலர் ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர். விழா மேடையில் அவர்களுக்கு இருக்கையும் ஒதுக்கப்படவில்லை என்ற புகாரும் எழுந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gRSJUFC
0 Comments