
சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி பள்ளியில் உள்ள விடுதியில் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததால் உயிரிழந்தார் எனக் கூறி, பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்த நிலையில், பெற்றோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது, மாணவி உடலில் காயங்கள் இருப்பதாகவும், தங்கள் மகளை கொலை செய்ததாகக் கூறி, அன்றைய தினமே பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து அவர்கள் மாணவியின் உடலை வாங்க மறுத்து கடந்த சில தினங்களாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாணவி உயிரிழந்ததற்கான பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் மாணவி உயிரிழப்புக்கு முன்னரே உடலில் காயங்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவியின் கை, கால்கள் உடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தோடு, முக்கிய உறுப்புகளான இருதயம், கல்லீரல் உள்ளிட்ட 5 உறுப்புகள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பபட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர், கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6YJMvXm
0 Comments