ஆசிய கோப்பை | கோலி - சூர்யகுமார் இணை அதிரடி; ஹாங்காங் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில் விராட் கோலி அரைசதமடித்து மீண்டும் பழைய ஃபார்மிற்கு திரும்பினார். அவருடன் சூர்யகுமார் யாதவும் அதிரடி காட்டினார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இந்நிலையில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் இன்று ஹாங்காங்குடன் மோதி வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments