ஜோதிடம்

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருடன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி அறிவித்துள்ளார்.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின்   முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஜுலன் (39), சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த தொடருக்கு சேர்க்கப்படவில்லை. இந்நிலையில்,   இங்கிலாந்துடன் ஒருநாள் தொடரில் (3 போட்டி) மோதும் இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. அந்த தொடரின் கடைசி ஆட்டம் செப். 24ம் தேதி லார்ட்ஸ் அரங்கில் நடைபெற  உள்ளது. அன்று தனது கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஜுலன் அறிவித்துள்ளார். 2002ல் அறிமுகமான அவர் இதுவரை 12 டெஸ்டில் 44 விக்கெட்,  201 ஒருநாள் போட்டியில் 252  விக்கெட் மற்றும் 68 டி20ல்  56 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் எடுத்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக  உள்ளார்.



from Dinakaran.com |21 Aug 2022 https://ift.tt/rA1e0LQ
via IFTTT

Post a Comment

0 Comments