
திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாது மலையில் உள்ள ஜமுனாமரத்தூர் அருகேயுள்ள கூட்டத்தூர் என்ற சிறிய கிராமத்தில் பல்லவர் காலத்து நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க. மோகன்காந்தி தலைமையில், வணிகவியல் பேராசிரியர் ராஜ்குமார், காணிநிலம் மு. முனசாமி மற்றும் ஆய்வு மாணவர்கள் கொண்ட குழுவினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் களஆய்வு நடத்தி வருகின்றனர். அந்தவகையில், திருப்பத்தூரை அடுத்த ஜவ்வாது மலையில் களஆய்வு நடத்திய போது பல்லவர் காலத்தைச் சேர்ந்த நடுகற்கள் தொடர்ச்சியாக இருப்பதை கண்டறிந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34Dmp7V
0 Comments