https://ift.tt/2PuEY9c

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் க.செந்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: நேஷனல் மெடிக்கல் கமிஷன் சட்டம் 2019 பிரிவு 34 மற்றும் 54-ன் படி தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், போலி டாக்டர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த புதிய சட்டத்தின்படி முறையாக எம்பிபிஎஸ் பட்டப்படிப்பு படிக்காமல், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவுபெறாமல், அலோபதி மருத்துவம் செய்யும் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். அதற்குரிய சட்டப்பிரிவும், மூத்த வழக்கறிஞர்கள் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WSGidMU

Post a Comment

0 Comments