https://ift.tt/iYWFPXJ

புதுச்சேரி: தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை புதுச்சேரி, காரைக்கால் உட்பட அனைத்து பிராந்தியங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று கல்வியமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார்.

புதுச்சேரி உள்துறை மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "புதுச்சேரி மாநில நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பாக பிரதமரை சந்தித்து கூடுதல் நிதியை புதுச்சேரிக்கு ஒதுக்கி தர முதல்வர் ரங்கசாமி கோரிக்கை வைத்தார். நிதிநிலை அறிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளதால், திருத்திய மதிப்பீட்டில் பரிசீலிப்பதாக தெரிவித்தனர். தற்போது ரூ.1400 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி முழுவதும் புதுச்சேரி வளர்ச்சிக்கு பயன்படுத்த முதல்வர் உரிய திட்டங்களை வகுத்து பெஸ்ட் புதுச்சேரியை உருவாக்க நடவடிக்கை எடுப்பார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ORi1vGK

Post a Comment

0 Comments