
சென்னை: அடுத்த 2 மணி நேரத்திற்குள்ளாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மீண்டும் மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நடப்பு ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் நேற்றுமுன்தினமே தொடங்கி விட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அண்மையில் வங்கக் கடலில் உருவான சித்ரங் புயலால், கடந்த வாரத்தில் துவங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை, சற்றே தாமதமாக தொடங்கினாலும் மழையின் தன்மையை பாதிக்காது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. நாளை முதல் வடகிழக்குப் பருவ மழையின் தீவிரம் அதிகரிக்கும் எனச் சொல்லப்பட்ட நிலையில் இன்று மாலை முதலே சென்னையில் கனமழையின் தீவிரம் அதிகமாக இருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4YdpEMJ
0 Comments