https://ift.tt/N6kinzh

மதுரை: வார்டு மக்கள் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், எத்தனை நாளுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று கேட்ட கேள்விக்கு மதுரை மாநகராட்சி 7 நாள் அல்லது அதற்கு மேல் ஆகும் என்று பதில் அளித்துள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மதுரை தாசில்தார் நகர் 37வது வார்டில் சித்திவிநாயகர், வ.உசி.1, 2, 3 தெருக்கள், சித்தி விநாயகர் காயில் தெரு, அண்ணா தெரு, அன்னை அபிராமி தெரு, எழில் வீதி, கலைஞர் தெரு, திரு.வி.க.தெரு, குறிஞ்சி தெரு உள்ளிட்ட பல்வேறு குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் 12 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் காவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின்மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. குழாயில் குடிநீர் விநியாகம் செய்யப்படாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Wf5Dg8B

Post a Comment

0 Comments