https://ift.tt/xvb2geE

மதுரை: தீபாவளி விடுமுறைக்கு வந்தவர்கள் மீண்டும் பணியிடங்களுக்கு திரும்பி வருவதால் மதுரை ரயில், பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுக்கு பிறகு இவ்வாண்டு, தீபாவளியை கொண்டாட மக்கள் ஆர்வம் காட்டினர். வெளியூர்களில் இருந்தவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்தினருடன் தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். இம்முறை தீபாவளி திங்கள் கிழமை அன்று என்பதால் முன்னதாக சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்தது. குறிப்பாக சென்னை, பெங்களூர் போன்ற வெளியூர்களில் இருந்து மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கு ஏராளமானோர் தீபாவளி கொண்டாட வந்தனர். பெரும்பாலும், இவர்கள் சுமார் 2 மாதத்திற்கு முன்பாகவே ரயில்கள், ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gE3h5se

Post a Comment

0 Comments