ஜோதிடம்

மகளிர் குழு டென்னிஸ் உலக சாம்பியன் போட்டியான பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டம்  இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடந்தது. அதில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா 19வது முறையாகவும், சுவிட்சர்லாந்து 3வது முறையாகவும் களம் கண்டன. ஒற்றயைர் பிரிவுகளில் பெலிண்டா பென்சிக் 6-2, 6-1 என நேர் செட்களில் ஆஸியின் அய்லா டோம்லஜனோவிச்சை வீழ்த்தினார். அதேபோல் மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் சுவிஸ் வீராங்கனை ஜில் தெய்க்மன் 6-3,4-6, 6-3 என்ற செட்களில் ஆஸியின் ஸ்டோர்ம் சாண்டர்சை சாய்தார். அதனால் சுவிஸ் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. அதனால் கடைசியாக நடைபெற வேண்டிய சுவிஸ் வீராங்கனைகள் விக்டோரிஜா கொலுபிக், சிமானா வால்டர்ட் மற்றும் ஆஸி வீராங்கனைகள் பிரிஸ்ஸில்லா ஹான், எலன் பெரெஸ்/சாம் ஸ்டோசர் ஆகியோர் மோத இருந்த இரட்டையர் ஆட்டம் கைவிடப்பட்டது. கூடவே சுவிட்சர்லாந்து முதல்முறையாக உலக சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. சுவிஸ் வீராங்கனைகளுக்கு தங்கப்பதக்கங்களும், ஆஸி வீராங்கனைகளுக்கு வெள்ளிப் பதக்கங்களும் அணிவிக்கப்பட்டன. உற்சாகத்தில் இருக்கும் சுவிஸ் வீராங்கனைகளுடன் அணியின் கேப்டன் ஹெய்ன்ஸ் குன்தார்ட், கோப்பையை  வழங்கிய முன்னாள் வீராங்கனை பில்லி ஜீன் கிங் ஆகியோர் உள்ளனர்.* நடால் தோல்விஉலகின் முன்னணி வீரர்கள் 8 பேர் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி இத்தாலியின் டூரின் நகரில் நடக்கிறது. ரவுண்டு ராபின் முறையிலான ஆட்டங்களில், பச்சை பி ரிவில் உள்ள ரஃபேல் நடால்(ஸ்பெயின், 2வது ரேங்க்),  டெய்லர் ஃபிரிட்ஸ்(அமெரிக்கா, 9வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் டெய்லர் ஒரு மணி 37 நிமிடங்களில் 7-6(6-3), 6-1 என நேர் செட்களில் வென்றார்.



from Dinakaran.com |15 Nov 2022 https://ift.tt/esVa1Sh
via IFTTT

Post a Comment

0 Comments