https://ift.tt/l4ebvtZ

மதுரை: தமிழகத்தில் பிற ஆசிரியர்களை போல் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு சிறப்பு பள்ளிகள் கவுன்சில் அமைப்பின் செயலாளர் வெற்றிவேல் முருகன், உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் "தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அறிவுசார் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்காக சிறப்பு பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இப்பள்ளிகளில் சிறப்பு ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஊதியம் மிக மிக குறைவாகும். பிற ஆசிரியர்களை போல் சிறப்பு ஆசிரியர்களுக்கும் ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கக்கோரி தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, சிறப்பு ஆசிரியர்களுக்கு பிற ஆசிரியர்களை போல் ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க உத்தரவிட வேண்டும்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/6iOmB2b

Post a Comment

0 Comments