https://ift.tt/Sr53keD

சிவகாசி: வாய்ப்பு கிடைத்தால் தந்தையைப் போல் விருதுநகர் வளர்ச்சிக்கு சிறப்பாக பணியாற்றுவேன் என்று மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறியுள்ளார்.

சிவகாசியில் விருதுநகர் மாவட்ட மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெற்றது. அதன் பின் துரை வைகோ செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, ‘தமிழகம் முழுவதும் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. மதிமுக அமைப்பு தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. அதற்காக சிவகாசி வந்துள்ளேன். சிவகாசி பகுதிகளில் நடக்கும் பட்டாசு விபத்துகளில் விசாரணையின்றி உரிமையாளர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனால் அவர்கள் சமுதாய ரீதியாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். விபத்து ஏற்பட்டால் உரிய விசாரணைக்கு பின் உரிமையாளர்களை கைது செய்ய வேண்டும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/u1XAcPJ

Post a Comment

0 Comments