IPL 2023 ஏலம் | 277 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 991 வீரர்கள் பதிவு

எதிர்வரும் 2023 ஐபிஎல் சீசனில் விளையாட மொத்த, 991 வீரர்கள் பதிவு செய்திருப்பதாக ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் தெரிவித்துள்ளது. இதில் 277 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 714 இந்திய வீரர்களும் அடங்குவர். வரும் 23-ம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் ஐபில் 2023 ஏலம் நடைபெற உள்ளது.

இந்த ஏலத்தில் 10 ஐபிஎல் அணிகளும் தங்கள் கைவசம் உள்ள தொகையுடன் கூடுதல் 5 கோடி ரூபாய் வரை பயன்படுத்தி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டிகளில் விளையாடிய 185 வீரர்கள், உள்ளூர் அளவில் விளையாடிய 786 வீரர்கள் அடங்குவர் என தெரிகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments