https://ift.tt/0rv9jIO

மதுரை: பெற்றோருக்கு தெரியாமல் பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரராக விளையாட வந்த கல்லூரி மாணவர், 23 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்ற சுவாரசிய நிகழ்வு நடந்தள்ளது.

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டியில் இன்று அலங்கநால்லூர் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன், 23 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றார். இவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கிய பாலமேட்டைச் சேர்ந்த போஸ் மணி இரண்டாம் இடம் பெற்றார். இவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. சிறந்த காளைக்கான முதல் பரிசுக்கு ரெங்கராஜன்புரத்தை சேர்ந்த மணிகார்த்திக் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. இவருக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. சிறந்த இரண்டாவது காளையாக திண்டுக்கல்லைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. அவருக்கு நாட்டின கன்றுடன் கூடிய பசு மாடு வழங்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Wo0cPjF

Post a Comment

0 Comments