https://ift.tt/3QnGivJ

மதுரை: மதுரை அருகே 20 ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கும் வழக்கறிஞர் ஒருவர், அந்த காளைகளை பராமரித்து பயிற்சி வழங்க ஒரு ஏக்கரில் ரூ.1 கோடியே 40 லட்சத்தில் நீச்சல் குளத்துடன் கூடிய பிரமாண்ட ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் கட்டி வருகிறார். ஒரு வாரத்தில் இந்த கட்டுமானம் முடியும்நிலையில் மாட்டுப்பொங்கல் அன்று, இந்த கட்டிடத்தை திறக்க திட்டமிட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மதுரை மாவட்டம் புகழ்பெற்றது. காளைகள் வளர்ப்பதிலும், மாடுபிடி வீரராகி காளைகளை அடக்குவதிலும் மதுரை இளைஞர்கள் கொண்டுள்ள ஆர்வம் ஆச்சரியப்பட வைக்கிறது. ஒவ்வொரு வீடுகளிலும் ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதை பாரம்பரியமாக கொண்டுள்ளனர். குழந்தைகளை போல் பாசமாக அரவணைத்து வளர்கிறார்கள். ஜல்லிக்கட்டு போட்டியை தவிர வேறு எந்த வேலைகளுக்கும் இந்த காளைகளை பயன்படுத்தமாட்டார்கள். அதனாலே, மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக புகழ்பெற்றதாக திகழ்கிறது.

பல லட்சம் ரூபாய் முதலீட்டில் காளைகளை வாங்கி ஆண்டு முழுவதும் அதற்கு பிரத்தியேக உணவுகள் வழங்கி, பராமரித்து பயிற்சிகள் வழங்கி பொங்கல் பண்டிகை நாட்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மட்டும் அதனை வாடிவாசலில் அவிழ்த்து விடுவதை பெருமையாக கருதுகிறார்கள். இப்படி ஒரு விளையாட்டிற்காக எந்த வருமான நோக்கமும், எதிர்பார்ப்பும் இல்லாமல் மதுரை மாவட்டத்தில் உள்ள மக்கள் காளைகளை தயார் செய்கிறார்கள்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9QADixa

Post a Comment

0 Comments