https://ift.tt/E48OTDA

ஸ்ரீவில்லிபுத்தூர்: சென்னை முதல் திருவனந்தபுரம் வரை 10 நாட்கள் 1000 கிலோ மீட்டர் தூரத்தை ஆட்டோவில் சாகச சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தரிசனம் செய்தனர்.

தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக சென்னை முதல் திருவனந்தபுரம் வரை பாரம்பரிய பயணத்தை ஜெர்மனி, நியூசிலாந்து, இங்கிலாந்து, அமெரிக்கா, நெதர்லாந்து, ஆஸ்திரேலியா நாடுகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 70 பேர் சாகச சுற்றுலா மேற்கொண்டுள்ளனர். இவர் 32 ஆட்டோக்களில் தனித்தனி குழுவாக பிரிந்து சென்னையில் கடந்த 28-ம் தேதி குழு தனது பாரம்பரிய பயணத்தை தொடங்கியது. முன்னதாக வெளிநாட்டு பயணிகளுக்கு தமிழகத்தின் விதிமுறைகள் மற்றும் சட்ட திட்டங்கள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/cQbdwpW

Post a Comment

0 Comments