
மதுரை: கடந்தாண்டு (2022) ரூ. 11.40 கோடி மதிப்புள்ள கடத்தல் ரேசன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன என உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை எஸ்பி தெரிவித்தார்.
உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல காவல் கண்காணிப்பாளர் சிநேகப் பிரியா தலைமையில் ரேசன் பொருட்கள் கடத்தல் பதுக்கலை தடுக்க மதுரை உட்பட 10 மாவட்ட குற்றப்புலனாய்வுத்துறை காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் மூலம் கடந்தாண்டு 2,113 நபர்கள் மீது 1981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/9owxHv6
0 Comments