https://ift.tt/UJXH8Tz

வடலூர்: இன்னும் 2 ஆண்டுகளில் தனியார் வசமாகவுள்ள என்எல்சி நிறுவனத்திற்கு 22 ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த துடிப்பதேன் என வடலூர் அருகே நேற்று நடைபயணத்தை துவக்கிய அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலியைச் சுற்றியுள்ள 49 கிராமங்களில் 22 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் கையகப்படுத்துவதைக் கண்டித்தும், கடலூர் மாவட்டத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வலியுறுத்தியும், அப்பகுதி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இருநாள் நடைபயணம் மேற்கொண்டுள்ளார். அதற்கான நடைபயணத்தை குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்குட்பட்ட வடலூர் அருகே வாணதிராயபுரம் கிராமத்தில் துவக்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/wzoJiSX

Post a Comment

0 Comments