https://ift.tt/IypmAU4

மதுரை: மதுரை அருகே டி.குன்னத்தூரில் ஒரே மேடையில் முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் மகள் உள்பட 51 ஜோடிகளுக்கு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி சமத்துவ சமுதாய திருமணம் நடத்தி வைக்கிறார். இந்த விழா ஏற்பாடுகளை நேற்று முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

எம்ஜிஆரின் 106-வது பிறந்த நாள், ஜெயலலிதாவின் 75 வது பிறந்த நாள் மற்றும் 51வது ஆண்டு அதிமுக பொன்விழாவை முன்னிட்டு ஜெ., பேரவையின் சார்பில், மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஏற்பாட்டில் வரும் பிப்ரவரி 23-ம் தேதி சமத்துவ சமுதாய திருமண விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மகள் பிரியதர்ஷினி-முரளி மணமக்கள் உட்பட 51 ஏழை, எளிய மணமக்களுக்கு சமத்துவ சமுதாய திருமணத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் நடத்தி வைக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/69jA4ED

Post a Comment

0 Comments