https://ift.tt/do6ArJK

சங்கரன்கோவில்: கரிவலம்வந்தநல்லூரில் மீண்டும் ரயில் நிலையம் அமைக்க வேண்டும், மேட்டுப்பாளையம் - தூத்துக்குடிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டும் என வைகோ, சு.வெங்கடேசன் உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் ரயில்வே ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட எம்பிக்களின் ஆலோசனைக் கூட்டம் நேற்று மதுரை ரயில்வே காலனியிலுள்ள வைகை இல்லத்தில் நடந்தது. தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்என். சிங் வரவேற்றார். எம்பிக்கள் வைகோ(ராஜ்யசபா), திருநாவுக்கரசர் (திருச்சி), சு.வெங்கடேசன் (மதுரை) மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), ரவீந்திரநாத் (தேனி), வேலுச்சாமி (திண்டுக்கல்), கார்த்திக் சிதம்பரம் (சிவகங்கை), சண்முகசுந்தரம் (பொள்ளாச்சி), தனுஷ்குமார் (தென்காசி) மற்றும் மதுரை கோட்ட மேலாளர் பத்மநாபன் அனந்த் உள்ளிட்ட ரயில்வே அதிகாரிகள் பங்கேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/68qevam

Post a Comment

0 Comments