https://ift.tt/WIK4rAd

புதுடெல்லி: தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தமிழகத்தில் துவங்கிய நீதிகேட்டு நெடும் பயணம் செவ்வாய்க்கிழமை டெல்லியில் நிறைவு பெற்றது. நாடாளுமன்றம் முன்பு போராட முயன்ற தமிழக விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் கடந்த மார்ச் 2ம் தேதி நீதிகேட்டு நெடும் பயணம் துவங்கியது. கன்னியாகுமரியில் துவங்கிய இந்த பயணத்தின் நிறைவு விழா, டெல்லி ஜந்தர்மந்தரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக, தமிழகத்திலிருந்து வந்திருந்த சுமார் ஐந்நூறு விவசாயிகள் நாடாளுமன்றத்தை நோக்கி செல்ல முயன்றனர். அவர்களை டெல்லி மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இது குறித்து போராட்டத்தை தலைமையேற்று நடத்திய பிஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் கூறியது: இந்த நீதி கேட்கும் நெடும் பயணம் கேரளா, சென்னை, ஆந்திரா, தெலங்கானா, சத்தீஸ்கர், ஒடிசா, மேற்குவங்கம், பீகார், ஜார்கண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள் வழியே வந்தடைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TiFoXr6

Post a Comment

0 Comments