
மதுரை: அடுத்த 25 ஆண்டுக்கான இந்தியாவின் வளர்ச்சிகளை சிந்தித்து, அதை நோக்கி பிரதமர் மோடி செயல்படுகிறார் என, காமராசர் பல்கலைக்கழக ஆவணப்படத் திருவிழா தொடக்க விழாவில் பீகார் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர் பேசினார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம், டெல்லி தேசிய கல்வித் தொடர்புக்கான கூட்டமைப்பு மற்றும் கல்விப் பல் ஊடக ஆய்வு மையம் (இஎம்ஆர்சி) ஆகியவை இணைந்து 14வது பிரக்கிரிதி 3 நாள் சர்வதேச ஆவண திரைப்படத் திருவிழாவை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடத்த ஏற்பாடு செய்தன. இதற்கான தொடக்கவிழா இன்று நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் வரவேற்றார். கல்வித் தொடர்புக்கான கூட்டமைப்பு இயக்குநர் ஜகத் பூஷன் நட்டா தலைமை வகித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/oixUMWg
0 Comments