
புதுடெல்லி: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டாப் ஆர்டரில் பிரித்வி ஷா ஸ்பார்க் கொடுக்க தவறி விட்டதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் தொடக்கத்தின் போது இளம் வீரரான பிரித்வி ஷா மீது தான் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படையாகவே பாண்டிங் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“நடப்பு சீசனில் 6 போட்டிகள். கடந்த சீசனின் பிற்பாதியில் 6 அல்லது 7 போட்டிகள் என நான் நினைக்கிறேன். அதாவது 12 அல்லது 13 போட்டிகளாக இன்னிங்ஸை ஓப்பன் செய்யும் பிரித்வி ஷா, அரைசதம் பதிவு செய்யவில்லை. எங்களுக்கு டாப் ஆர்டரில் ஸ்பார்க் தேவைப்பட்டது. ஆனால், அவர் அதனை கொடுக்க தவறி விட்டார். அவர் மேட்ச் வின்னர் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் தான் அவரை அணியில் தக்க வைத்தோம். களத்தில் அவர் குறிப்பிட்ட பந்துகளை எதிர்கொண்டு விட்டால் நாங்கள் 95 சதவீதம் வெற்றி பெறுவோம் என்பதை அறிவோம். இருந்தும் நடப்பு சீசனில் 47 ரன்கள் மட்டுமே அவர் எடுத்துள்ளார். அது போதவே போதாது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments