https://ift.tt/YfJ8MS0

கொடைக்கானல்: மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக இன்று (மே 14) மாலை கொடைக்கானலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். நாளை (மே 15) அன்னை தெரசா பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்ய உள்ளார்.

சென்னையில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் இன்று (மே 14) காலை ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். அங்கிருந்து கார் மூலம் வத்தலக்குண்டு வழியாக மாலை 5.30 மணிக்கு கொடைக்கானல் வந்தார். முன்னதாக பிற்பகல் 1.30 மணிக்கு அம்மையநாயக்கனூர் அரசு விருந்தினர் மாளிகையில் அவரை திண்டுக்கல் டிஆர்ஓ லதா, டிஐஜி அபிநவ் குமார், எஸ்பி பாஸ்கரன் ஆகியோர் வரவேற்றனர். அங்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலையில் கொடைக்கானலுக்கு வந்த அவரை மாவட்ட ஆட்சியர் விசாகன், அன்னை தெரசா பல்கலை கழக துணை வேந்தர் கலா உள்ளிட்டோர் வரேற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5bcKFU7

Post a Comment

0 Comments