
லண்டன்: நடப்பு ஆஷஸ் தொடரின் 2-வது டெஸ்ட் போட்டியில் கடைசி நாளன்று இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோ அவுட் செய்யப்பட்ட விதம் சர்ச்சையானது. இந்நிலையில், அதற்கு ஆஸ்திரேலிய அணி மன்னிப்பு தெரிவிக்க வேண்டும் என ஜெஃப்ரி பாய்காட் தெரிவித்துள்ளார்.
பந்து டெட் என எண்ணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது ஸ்ட்ரைக்கில் இருந்த பேர்ஸ்டோ கிரீஸை விட்டு நகர்ந்து சென்றார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி, ஸ்டம்புகளை தகர்த்தார். அதையடுத்து அவர் அவுட் என அறிவிக்கப்பட்டது. இது கிரிக்கெட் உலகில் விவாதப் பொருளானது. இந்த சூழலில் ஜெஃப்ரி பாய்காட் இதனை தெரிவித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments