
டிரினிடாட்: மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 351 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணிக்காக இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக பேட் செய்து அரை சதம் கடந்தனர். ஷூப்மன் கில், 92 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments