“டி20 லீக்கில் கிடைக்கும் பணத்துக்காக ஒருநாள் கிரிக்கெட்டுக்கு விடை தருகிறேன்” - டிகாக்

டர்பன்: எதிர்வரும் உலகக் கோப்பை தொடர் தான் தென்னாப்பிரிக்க அணிக்காக டிகாக், விளையாடும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடர். அதன்பிறகு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இந்த சூழலில் ஓய்வுக்கான காரணம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.

30 வயதான டிகாக், சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்க அணிக்காக கடந்த 2012 முதல் விளையாடி வருகிறார். இதுவரை 54 டெஸ்ட், 145 ஒருநாள் மற்றும் 80 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். அதன் மூலம் மொத்தமாக 11,753 ரன்கள் சேர்த்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டின் இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற உள்ளார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments