ஆஸ்திரேலிய ஓபன் | ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜன்னிக் ஷின்னர் சாம்பியன்!

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த இளம் வீரர் ஜன்னிக் ஷின்னர். ரஷ்யாவின் மெத்வதேவை அவர் இறுதிப் போட்டியில் வீழ்த்தி இருந்தார்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் கடந்த 14-ம் தேதி தொடங்கியது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது. ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜன்னிக் ஷின்னர் மற்றும் மெத்வதேவ் பலப்பரீட்சை மேற்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் ஷின்னர் வெற்றி பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments