‘500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்துவிட்டது’ - அஸ்வினின் மனைவி பகிர்வு

சென்னை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின், அண்மையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். இந்த சூழலில் 500-க்கும் 501-வது விக்கெட்டுக்கும் இடையே நிறைய நடந்து விட்டது என அஸ்வினின் மனைவி ப்ரீத்தி நாராயணன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஸாக் கிராலி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இந்த மைல்கல் சாதனையை அஸ்வின் படைத்திருந்தார். இருந்தும் அன்றைய நாளின் இரவே அணியில் இருந்து விலகி சென்னை திரும்பினார். குடும்ப உறுப்பினருக்கு ஏற்பட்ட அவசர நிலை காரணமாக அஸ்வின் சென்றிருந்தார். தொடர்ந்து போட்டியின் 4-ம் நாளன்று சென்னையில் இருந்து ராஜ்கோட் வந்து அணியுடன் இணைந்து போட்டியில் பங்கேற்றிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments