
புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் இடைநீக்கத்தை திரும்பப் பெற்றது உலக மல்யுத்த கூட்டமைப்பு. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து இருந்தது உலக மல்யுத்த கூட்டமைப்பு. உரிய நேரத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது இதற்கான காரணமாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீதான இடைநீக்கம் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments