“பிரதமர் மோடியை சந்திக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது” - ரோஹன் போபண்ணா ட்வீட்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றிருந்தார். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற அதிக வயதுடைய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

“பிரதமர் மோடியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இது மிகவும் அரிதானது. என்னை உலக நம்பர் 1 வீரராகவும், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியனாகவும் வழிவகுத்த ராக்கெட்டினை வழங்குவதில் பெருமை. உங்களது பண்பு எனக்கு அதீத ஊக்கம் தருகிறது” என ரோஹன் போபண்ணா தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments