பிசிசிஐ ஒப்பந்தம் | ஜெய்ஸ்வால் உள்ளே... இஷான், ஸ்ரேயஸ் வெளியே!

மும்பை: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது. இதில் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். அதே நேரத்தில் இந்திய அணிக்காக விளையாடி வந்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆண்டுதோறும் இந்திய அணிக்காக விளையாடும் வீரர்களின் ஒப்பந்தம் சார்ந்த விவரங்களை பிசிசிஐ புதுப்பிக்கும். அந்த வகையில் 2023 - 2024 சீசனுக்கான வீரர்களின் ஒப்பந்த விவரம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் உள்ளூர் அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மறுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயஸ் ஐயர் இடம்பெறவில்லை. கடந்த சீசனுக்கான ஒப்பந்தத்தில் இவர்கள் இருவரும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியில் அங்கம் வகிக்கும் வீரர்கள் அணிக்காக விளையாடாத சமயங்களில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ பரிந்துரை செய்திருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments