தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தியது எப்படி? - மனம் திறக்கும் சாய் சுதர்சன்

சென்னை: ஐபிஎல் தொடரில் கடந்த சீசனின் இறுதிப் போட்டியில் சிஎஸ்கேவுக்கு எதிராக 96 ரன்கள் விளாசி அனைவரது கவனத்தையும் தனது பக்கம் ஈர்த்த 22 வயதான சென்னையை சேர்ந்த சாய் சுதர்சன், நடப்பு சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக அபார செயல் திறனை வெளிப்படுத்தி வருகிறார். அப்போது தவறவிட்ட சதத்தை இந்த சீசனில் கடந்த 10-ம் தேதி அகமதாபாத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் விளாசியிருந்தார்.

அந்த ஆட்டத்தில் 51 பந்துகளில் 103 ரன்களை விளாசி மிரளச் செய்திருந்தார் சாய் சுதர்சன். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் குறைந்த ஆட்டங்களில் ஆயிரம் ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அவர், 25 ஆட்டங்களில் இந்த சாதனையை நிகழ்த்தினார். இதற்கு முன்னர் இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் 31 ஆட்டங்களில் ஆயிரம் ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments