‘எனது சாதனைகளை முறியடிக்கும் வாய்ப்பு ஜெய்ஸ்வாலுக்கு உள்ளது’ - பிரையன் லாரா

மும்பை: சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2004-ல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 ரன்கள் சாதனையை படைத்திருந்தார் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான பிரையன் லாரா. இந்த சூழலில் தனது சாதனையை முறியடிக்கும் சிறந்த வாய்ப்பை இளம் இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐபிஎல் சீசனில் லாரா மற்றும் ஜெய்ஸ்வால் இடையிலான ஆத்மார்த்தமான அன்பு நிறைந்த பந்தம் உருவாகியுள்ளது. அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக லாரா இருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜெய்ஸ்வால் விளையாடி வந்தார். கடந்த சீசனுக்கு பிறகு தான் இந்திய அணிக்காக ஆடும் வாய்ப்பை ஜெய்ஸ்வால் பெற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments