
சார்லோட்: நடப்பு கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில் உருகுவே அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தியது கொலம்பியா அணி. இதன் மூலம் அந்த அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்தச் சூழலில் போட்டி நடைபெற்ற அமெரிக்காவின் சார்லோட் மைதான பார்வையாளர் மாடத்தில் கொலம்பிய நாட்டு ரசிகர்களை உருகுவே அணி வீரர்கள் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளன. இது தொடர்பான வீடியோவில் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தாக்கிக் கொள்ளும் காட்சி இடம்பெற்றுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments