
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா - நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் தம்பதியினர் விவாகரத்தை அறிவித்துள்ளனர். “கடினமான முடிவு” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “4 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த நிலையில், தற்போது நானும், நடாஷாவும் பரஸ்பரம் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இது தான் நல்லது என நம்புகிறோம். பரஸ்பர மரியாதை, தோழமையுடன் மகிழ்ச்சியை அனுபவித்த நாங்கள் எடுத்த கடினமான முடிவு இது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments