
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் களமிறங்கவில்லை.
கணுக்கால் காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், அதில் இருந்து குணமடைந்து வருகிறார். காயங்களுக்கு பிந்தைய சிகிச்சையை அவர், பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமில் பெற்று வருகிறார். முழு உடற்தகுதியை எட்டுவதற்கான இறுதிக்கட்ட நிலையில் ஷமி இருப்பதாக கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments