ஜார்க்கண்ட் குத்துச்சண்டை போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 கிலோ பிரிவை சேர்க்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜார்கண்டில் வரும் செப்.13ம் தேதி அன்று நடைபெறும் தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான 50 கிலோவுக்கு மேற்பட்ட பிரிவையும் சேர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் இந்திய பள்ளிகளுக்கான சான்றிதழ்கள் தேர்வு கவுன்சில் (சிஐஎஸ்சிஇ) அமைப்பின் பாடத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திலும் சுமார் 3 ஆயிரம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தேசிய அளவில் பள்ளிகளுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments