புச்சிபாபு கிரிக்கெட் அரை இறுதி ஆட்டம்: டிஎன்சிஏ லெவன் அணி 194 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் - ஹைதராபாத் அணிகள் இடையிலான ஆட்டம் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 313 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 100.4 ஓவர்களில் 327 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரித்திக் ஈஸ்வரன் 140 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் விளாசினார். முகமது 47 ரன்கள் சேர்த்தார். ஹைதராபாத் அணி தரப்பில் தனய் தியாகராஜன் 7 விக்கெட்கள் வீழ்த்தினார். 14 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஹைதராபாத் அணி நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 75 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ரோகித் ராயுடு 61, ஹிமா தேஜா 37 ரன்கள் சேர்த்தனர். ரவி தேஜா 33, சி.வி.மிலிந்த் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது. டிஎன்சிஏ பிரெசிடெண்ட் அணி தரப்பில் குர்ஜப்னீத் சிங், முகமது ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments