மும்பை டெஸ்ட்: இந்திய பவுலர்கள் ஆதிக்கம் - தடுமாறும் நியூஸிலாந்து 171/9

மும்பை: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த நியூஸிலாந்து 171 ரன்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 143 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரை 0-2 என்ற கணக்கில் இந்தியா இழந்துள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (நவ.1) தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 263 ரன்களைச் சேர்த்தது. ஷுப்மன் கில் அதிரடியாக விளையாடி 90 ரன்களைச் சேர்த்தார். ரிஷப் பந்து 60 ரன்களுக்கு அவுட்டானார். இதன் மூலம் முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 28 ரன்கள் முன்னிலைப் பெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments