
கேப் டவுன்: இந்திய கிரிக்கெட் வீரரான தினேஷ் கார்த்திக், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 லீக் கிரிக்கெட்டில் பார்ல் ராயல்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இதன் மூலம் இந்த லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற அடையாளத்தை அவர் பெற்றுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூனில் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்தார். இருப்பினும் எஸ்ஏ20 லீக்கில் விளையாடுவதாக சொல்லி இருந்தார். அதன்படி பார்ல் ராயல்ஸ் அணி அவரை ஒப்பந்தம் செய்தது. இந்த அணி ஐபிஎல் கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை நிர்வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments