
விராட் கோலியின் உடற்தகுதி குறித்த அச்சங்களை இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனான ஷுப்மன் கில் நீக்கியுள்ளார். விராட் கோலி நன்றாக இருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முழு உடற்தகுதியை அடைந்துவிடுவார் எனவும் கூறியுள்ளார்.
36 வயதான விராட் கோலி, நாக்பூரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் காயம் காரணமாக களமிறக்கப்படவில்லை. அவரது வலது முழங்காலில் வீக்கம் இருந்ததால் விளையாடவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் 19-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் விராட் கோலியின் காயம் கவலையை ஏற்படுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments