
சென்னை: நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 50 ரன்களில் வீழ்த்தி உள்ளது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி. இந்த வெற்றியின் மூலம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) துபாயில் நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் நியூஸிலாந்து விளையாடுகிறது. இதில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி சதம் விளாசினார்.
363 ரன்கள் என்ற பெரிய இலக்கை அரை இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா விரட்டியது. ரியான் ரிக்கல்டன் மற்றும் அந்த அணியின் கேப்டன் பவுமா இணைந்து இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ரிக்கல்டன், 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments