பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றுக்கு அரினா சபலென்கா முன்னேற்றம்

பாரிஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றுக்கு பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா முன்னேறியுள்ளார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று தொடங்கியது.

நேற்று நடைபெற்ற மகளிர் பிரிவு ஒற்றையர் சுற்று ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்காவும், ரஷ்ய வீராங்கனையான கமீலா ரகிமோவாவும் மோதினர். இதில் அரினா சபலென்கா 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் கமீலாவை எளிதில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments