இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட்: சிராஜ், ஆகாஷ் அபாரம் | ENG vs IND 2-வது டெஸ்ட்

பர்மிங்காம்: இந்திய அணி உடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 407 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி கடந்த 2-ம் தேதி பர்மிங்காம் நகரில் உள்ள எட்ஜ்பாஸ்டனில் தொடங்கியது. இதில் டாஸை இழந்த இந்திய அணி முதலில் பேட் செய்து முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷுப்மன் கில் 269 ரன்கள் எடுத்து அசத்தினார். ஜெய்ஸ்வால் 87, ஜடேஜா 89, வாஷிங்டன் சுந்தர் 42 ரன்கள் எடுத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments