சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ: ரசிகர்கள் தேர்வு!

சென்னை: சவுதி புரோ லீக் சீசனின் சிறந்த வீரருக்கான விருதை வென்றுள்ளார் கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. இது ரசிகர்களின் தேர்வாகும்.

2025/26 சீசனில் சவுதி புரோ லீக் தொடரில் அல்-நசர் அணியை கேப்டனாக ரொனால்டோ வழிநடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 40 வயதான அவர், இந்த சீசனில் 34 லீக் போட்டிகளில் விளையாடி, 15 முறை ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். இது தொடர்பாக லீக் தொடரை நடத்தும் நிர்வாகம் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

Post a Comment

0 Comments