
மான்செஸ்டர்: இங்கிலாந்து அணி உடனான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியை டிரா செய்துள்ளது இந்திய அணி. வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஜடேஜா இணைந்து 203 ரன்கள் கூட்டணி அமைத்தனர். இருவரும் சதம் கடந்து அசத்தினர்.
ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 358 ரன்களும், இங்கிலாந்து 669 ரன்களும் எடுத்தன. 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை இந்தியா தொடங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Comments